திரையுலகில், சூப்பர் ஸ்டார் ரஜினி மீது – உண்மையான – மதிப்பும், அன்பும் கொண்டுள்ள நடிகர்களில், ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தும் ஒருவர். இந்த வார ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி சூப்பர் ஸ்டார் மீது அவர் எந்தளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை நன்கு உணர்த்தியது. (பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அளித்த பத்திரிக்கை பேட்டிகளை பற்றி தயவு செய்து யாரும் கூறவேண்டாம். இப்போது என்னவோ அதை பாருங்கள்.)
எந்த வித பின்புலமும் இன்றி அறிமுகமாகி, முழுக்க முழுக்க எதிர்நீச்சல் போட்டு இன்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றி தோல்விகளை எல்லாம் கடந்து தலைவருக்கு பிறகு பெஸ்ட் ஒப்பன்னிங் நட்சத்திரமாக திகழும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் திரையுலகில் ஓர் அதிசயம்.
முதுகெலும்பற்ற நடிகர்கள் மத்தியில் முதுகெலும்புள்ள ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தனது ரசிகர் மன்றப் பிரமுகர்கள் சிலர், இவரது கொள்கைகளுக்கு மாறாக அரசியல் கட்சியினரிடம் தேர்தல் நேரத்தில் விலைபோக, கொதித்துப் போன ஆஜீத், மன்றங்களை எல்லாம் கலைத்தே விட்டார். அப்போதும் இவர் விடுத்த அறிக்கை, ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்தும் நடிகர்கள் சிலர் படித்து என்லார்ஜ் செய்து பிரேம் போட்டு தங்கள் வீட்டு வரவேற்பரையில் மாட்டவேண்டிய ஒன்று.
இவருக்கு எதிராக இவரை ஒழித்துக்கட்ட வீசப்பட்ட அஸ்திரங்கள் மற்றும் பின்னப்பட்ட சூழ்ச்சிகள் எண்ணற்றவை. ஆண்டவனின் ஆசியோடு அவை அனைத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு புஸ்வானமாக்கிக் கொண்டிருக்கிறார் அஜீத். அஜீத்தின் இந்த சக்திக்கு பின்னால் உறுதுணையாக இருப்பவர்கள் அவரது ரசிகர்களே என்றால் மிகையாகாது.

இடையில் ஏற்பட்ட சிற்சில பிரச்னைகளால் தளர்ந்துபோயிருந்த அஜீத் தலைவரிடம் ஆசிபெற்று அவரது ‘பில்லா’ ரீமேக்கில் நடித்தபிறகு அவரது கேரியர் கிராஃப் சற்று நிமிர்ந்தது. அந்த சமயத்தில் அஜீத்துக்கு பர்சனலாக சில அட்வைஸ்கள் வழங்கிய தலைவர், சுவாமி ராமா எழுதிய ‘Living with Himalayan Masters’ என்னும் நூலை பரிசளித்தார். அந்த நூல், தலைவர் எதிர்பார்த்தது போல அஜீத்தின் எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் அவரது அணுகுமுறை இன்னும் மாறியது. ஒரு பரிபக்குவமான நிலையை அவருள் ஏற்படுத்தியது. (நம் நண்பர் சிங்கப்பூர் சூர்யா, முன்பு சென்னை வந்தபோது, எனக்கு இதே நூலை பரிசளித்திருந்தார். தற்போது தான் அந்நூலை படித்து வருகிறேன். சும்மா சொல்லக்கூடாது, பிரமாதமான நூல்! Sorry Surya for late reading!!).
சென்ற ஆண்டு முதல்வருக்கு நடந்த FEFSI பாராட்டு விழாவில், நடிகர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று முதல்வர் முன்பே அஜீத் போட்டுடைத்து, “ஆனால் நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்த்கொள்வது கட்டாயப்படுத்தப்படுவதால் அல்ல. உங்கள் மேல் உள்ள அன்பினால் தான்” என்று பேசியபோது, சூப்பர் ஸ்டாரே எழுந்துநின்று கைதட்டியது நினைவிருக்கலாம்.
இந்த வார ஆனந்த விகடனில் அஜீத் அளித்திருக்கும் பேட்டியில், தலைவரை பற்றிய கேள்வி-பதில் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்தே அவரது பக்குவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
————————————————————————
விகடன் : “ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?
அஜீத் : “கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் என் அப்பா, அம்மாவுக்கு பிறகு நான் நேரில் பார்த்த கடவுள் ரஜினி சார் தான். அவர் கிட்டே என்ன பேசினேன்னு சொல்றது நாகரீகமா இருக்காது. ரஜினி சார் எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கனும்கிறது தான் என் ஆசை!”
————————————————————————
அஜீத் இப்படி கூறுவதை அவர் ‘ரஜினி படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருகிறார்’ என்று தயவு செய்து யாரும் தவறாக அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். அவர் கூறுவது என்னவென்றால், ஒருவரது முன்னேற்றத்திலும் நலத்திலும் – உண்மையான – சுயநலமற்ற அக்கறையை – பெற்றவர்களிடம் மட்டும் தான் எதிர்பார்க்கமுடியும். அப்படிபப்ட்ட பெற்றோர் ஒருவகையில் நாம் கண்ணால் காணும் தெய்வம் தானே…? தலைவர் அப்படி ஒரு அக்கறையை அஜீத் மீது காட்டி, அவரது முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு அவருக்கு ஒரு தார்மீக பலத்தை கொடுத்தமையால் அஜீத் நெகிழ்ந்துபோய் உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தை தான், ‘என் அப்பா அம்மாவுக்கு பிறகு நான் பார்க்கும் கடவுள் ரஜினி சார்’ என்பது.

அஜீத் கூறும் பதிலை கூர்ந்து படிக்கும்போது தலைவரிடம் அவர் சமீபத்தில் (தாயகம் திரும்பிய பிறகு) பேசியிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘மங்காத்தா’ அபார வெற்றி பெற நம் தளம் சார்பாக அல்டிமேட் ஸ்டாரை வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை அதற்காக வேண்டுகிறேன்.
(அஜீத் நம் தலைவரை பற்றி உயர்வாக சொன்னதால் மட்டுமே அவரை பற்றி நான் இப்படி கூறுகிறேன் என்பது அல்ல. ஆஜீத்தை பற்றி எனக்கு எப்போதும் உயர்வான எண்ணமே இருந்து வந்துள்ளது. அற்ப விளம்பரங்களுக்கு ஆசைப்படும் பில்டப் நடிகர்களுக்கு மத்தியில் உண்மையில் அஜீத் பக்கா ஜென்டில்மேன். அவரது துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!).
முதுகெலும்பற்ற நடிகர்கள் மத்தியில் முதுகெலும்புள்ள ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தனது ரசிகர் மன்றப் பிரமுகர்கள் சிலர், இவரது கொள்கைகளுக்கு மாறாக அரசியல் கட்சியினரிடம் தேர்தல் நேரத்தில் விலைபோக, கொதித்துப் போன ஆஜீத், மன்றங்களை எல்லாம் கலைத்தே விட்டார். அப்போதும் இவர் விடுத்த அறிக்கை, ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்தும் நடிகர்கள் சிலர் படித்து என்லார்ஜ் செய்து பிரேம் போட்டு தங்கள் வீட்டு வரவேற்பரையில் மாட்டவேண்டிய ஒன்று.
இவருக்கு எதிராக இவரை ஒழித்துக்கட்ட வீசப்பட்ட அஸ்திரங்கள் மற்றும் பின்னப்பட்ட சூழ்ச்சிகள் எண்ணற்றவை. ஆண்டவனின் ஆசியோடு அவை அனைத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு புஸ்வானமாக்கிக் கொண்டிருக்கிறார் அஜீத். அஜீத்தின் இந்த சக்திக்கு பின்னால் உறுதுணையாக இருப்பவர்கள் அவரது ரசிகர்களே என்றால் மிகையாகாது.
இடையில் ஏற்பட்ட சிற்சில பிரச்னைகளால் தளர்ந்துபோயிருந்த அஜீத் தலைவரிடம் ஆசிபெற்று அவரது ‘பில்லா’ ரீமேக்கில் நடித்தபிறகு அவரது கேரியர் கிராஃப் சற்று நிமிர்ந்தது. அந்த சமயத்தில் அஜீத்துக்கு பர்சனலாக சில அட்வைஸ்கள் வழங்கிய தலைவர், சுவாமி ராமா எழுதிய ‘Living with Himalayan Masters’ என்னும் நூலை பரிசளித்தார். அந்த நூல், தலைவர் எதிர்பார்த்தது போல அஜீத்தின் எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் அவரது அணுகுமுறை இன்னும் மாறியது. ஒரு பரிபக்குவமான நிலையை அவருள் ஏற்படுத்தியது. (நம் நண்பர் சிங்கப்பூர் சூர்யா, முன்பு சென்னை வந்தபோது, எனக்கு இதே நூலை பரிசளித்திருந்தார். தற்போது தான் அந்நூலை படித்து வருகிறேன். சும்மா சொல்லக்கூடாது, பிரமாதமான நூல்! Sorry Surya for late reading!!).
சென்ற ஆண்டு முதல்வருக்கு நடந்த FEFSI பாராட்டு விழாவில், நடிகர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று முதல்வர் முன்பே அஜீத் போட்டுடைத்து, “ஆனால் நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்த்கொள்வது கட்டாயப்படுத்தப்படுவதால் அல்ல. உங்கள் மேல் உள்ள அன்பினால் தான்” என்று பேசியபோது, சூப்பர் ஸ்டாரே எழுந்துநின்று கைதட்டியது நினைவிருக்கலாம்.
இந்த வார ஆனந்த விகடனில் அஜீத் அளித்திருக்கும் பேட்டியில், தலைவரை பற்றிய கேள்வி-பதில் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்தே அவரது பக்குவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
————————————————————————
விகடன் : “ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?
அஜீத் : “கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் என் அப்பா, அம்மாவுக்கு பிறகு நான் நேரில் பார்த்த கடவுள் ரஜினி சார் தான். அவர் கிட்டே என்ன பேசினேன்னு சொல்றது நாகரீகமா இருக்காது. ரஜினி சார் எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கனும்கிறது தான் என் ஆசை!”
————————————————————————
அஜீத் இப்படி கூறுவதை அவர் ‘ரஜினி படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருகிறார்’ என்று தயவு செய்து யாரும் தவறாக அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். அவர் கூறுவது என்னவென்றால், ஒருவரது முன்னேற்றத்திலும் நலத்திலும் – உண்மையான – சுயநலமற்ற அக்கறையை – பெற்றவர்களிடம் மட்டும் தான் எதிர்பார்க்கமுடியும். அப்படிபப்ட்ட பெற்றோர் ஒருவகையில் நாம் கண்ணால் காணும் தெய்வம் தானே…? தலைவர் அப்படி ஒரு அக்கறையை அஜீத் மீது காட்டி, அவரது முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு அவருக்கு ஒரு தார்மீக பலத்தை கொடுத்தமையால் அஜீத் நெகிழ்ந்துபோய் உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தை தான், ‘என் அப்பா அம்மாவுக்கு பிறகு நான் பார்க்கும் கடவுள் ரஜினி சார்’ என்பது.
அஜீத் கூறும் பதிலை கூர்ந்து படிக்கும்போது தலைவரிடம் அவர் சமீபத்தில் (தாயகம் திரும்பிய பிறகு) பேசியிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘மங்காத்தா’ அபார வெற்றி பெற நம் தளம் சார்பாக அல்டிமேட் ஸ்டாரை வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை அதற்காக வேண்டுகிறேன்.
(அஜீத் நம் தலைவரை பற்றி உயர்வாக சொன்னதால் மட்டுமே அவரை பற்றி நான் இப்படி கூறுகிறேன் என்பது அல்ல. ஆஜீத்தை பற்றி எனக்கு எப்போதும் உயர்வான எண்ணமே இருந்து வந்துள்ளது. அற்ப விளம்பரங்களுக்கு ஆசைப்படும் பில்டப் நடிகர்களுக்கு மத்தியில் உண்மையில் அஜீத் பக்கா ஜென்டில்மேன். அவரது துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!).
No comments:
Post a Comment